search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் மீது வழக்குபதிவு"

    கோவை குனியமுத்தூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணா புரத்தை சேர்ந்த 16 வயது சிறுமியுடன், ரியாஸ் என்ற வாலிபர் நண்பராக பழகியுள்ளார். கடந்த 7-ந் தேதி சுந்தராபுரம் அருகே உள்ள முத்தையா நகர் பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு ரியாஸ், சிறுமியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து இருக்கிறார். பின்னர் அவர் தலைமறைவாகி விட்டார்.

    இது குறித்து அந்த சிறுமி போத்தனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ரியாஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

    நாகர்கோவில் அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி மைனர் பெண்ணை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் அருகே உள்ள மணிக்கட்டி பொட்டலைச் சேர்ந்தவர் லிங்கம் (வயது 22). தொழிலாளி.

    இவருக்கும், சுசீந்திரம் குளத்தூர் காலனியைச் சேர்ந்த 16 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார். மணிக்கட்டிப் பொட்டலில் உள்ள தனது உறவிரை பார்க்க வந்தபோது லிங்கத்துடன் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது.

    இவர்களது காதல் விவகாரம் 2 பேருடைய பெற்றோருக்கும் தெரியவந்தது. அவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். லிங்கம், அந்த பெண்ணின் பெற்றோரை நேரில் பார்த்து பெண் கேட்டார். ஆனால் அவர்கள் லிங்கத்துக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டனர்.

    இதனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் லிங்கமும், அந்த பெண்ணும் வீட்டை விட்டு வெளியேறினர். உவரியில் உள்ள கோவிலுக்கு சென்று அவர்கள் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் தனியாக குடும்பம் நடத்தினர்.

    இதில் அந்த பெண் கர்ப்பமானார். 9 மாத கர்ப்பிணியாக இருந்த அவர் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அந்த பெண்ணுக்கு 16 வயதே ஆவதை உறுதி செய்தனர். மைனர் பெண் ஒருவர் கர்ப்பமானது தொடர்பாக அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார், 9 மாத கர்ப்பிணியாக இருந்த அந்த பெண்ணை அழைத்து விசாரித்தனர். பின்னர் மைனர் பெண்ணை திருமணம் செய்து கர்ப்பணியாக்கியதாக லிங்கம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    லிங்கத்தை போலீசார் தேடிச் சென்றபோது அவர் தலைமறைவாகி இருந்தார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ×